Nagaratharonline.com
 
காரைக்குடி - கல்லுக்கட்டியில் போக்குவரத்து நெரிசல்  Sep 13, 11
 
காரைக்குடியில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை இன்றி, கல்லுக்கட்டி "செகண்ட் பீட்டில்' போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. காரைக்குடியில் இருந்து மதுரை மற்றும் தேவகோட்டை செல்லும் பஸ்கள் கல்லுக்கட்டி வழியாக செல்கிறது.

தினமும், காலை 9 மணிக்கு மேல் இங்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கல்லுக்கட்டியை சுற்றி பழம், பலகாரகடைகள், ஆட்டோ ஸ்டாண்ட், தள்ளு வண்டி கடைகள் ஆக்கிரமித்துள்ளன.
இதனால், இங்கு நெரிசல் அதிகரிக்கிறது. போக்குவரத்து போலீஸ் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

source : Dinamalar