Nagaratharonline.com
 
குன்றக்குடியில் குருபூஜை விழா  Sep 12, 11
 
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (செப். 13) நடைபெறவுள்ளது.
÷இந்த ஆதீனத்தின் குருமுதல்வர் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தம் சீடர்களுக்கு சிவஞானத்தை அருளி திருவண்ணாமலையில் ஜீவ சமாதியாகி அருள்பாலித்து வருகிறார்.
÷குருமுதல்வருக்கு ஆதீனத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை குன்றக்குடியில் குருபூஜை விழா நடைபெறுகிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்கிறார்.
÷குருபூஜையை முன்னிட்டு காளத்திநாதர் சிறப்பு வழிபாடு, சண்முகநாதப் பெருமான் வழிபாடு, குருமுதல்வரின் திருஉருவப்படம் வீதி உலா, சிறப்புச் சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
÷விழாவில், முனைவர் எஸ். மோகன், பேராசிரியர்கள் வே. சங்கரநாராயணன், பா. நமசிவாயம், விஞ்ஞானி கே. பாலகிருஷ்ணன், பேராசிரியர் ராம. ராமநாதன், கோவிந்தானந்த சுவாமி, பிள்ளையார்பட்டி கி. பிச்சைக் குருக்கள், பேராசிரியர் சொ. சேதுபதி உள்ளிட்டோர் பேசுகின்றனர்.


source : Dinamani