Nagaratharonline.com
 
"செட்டிநாடு சமையல் கலை கைகொடுத்தது' ; வேந்தன்பட்டி மீனாட்சி ஆச்சி.  Sep 8, 11
 
செட்டிநாடு சமையல் கலைதான் எனக்கு கைகொடுத்தது என்றார் சமையல் கலை நிபுணர் வேந்தன்பட்டி மீனாட்சி ஆச்சி.

மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைகழக வாழ்நாள் வரை கற்றல் சுயவேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:

இளம் வயதில் கணவரை இழந்து கைம்பெண் ஆனேன். வாழ வழி தெரியாமல் திண்டாடியபோது, செட்டிநாடு சமையல் கலைதான் கைகொடுத்தது. ஆரம்பத்தில், சிறிய அளவில் பலகாரங்கள் செய்து விற்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் 5 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்த நான், இன்று 25 பேருக்கு வேலை கொடுத்து வருகிறேன்.
நான் தயாரிக்கும் முறுக்கு, சீடை, அதிரசம், மணகோலம் ஆகியவை உள்நாட்டில் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இளைஞர்களாகிய நீங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டால் என்னைவிட சிறப்பாக வரலாம் என்றார் அவர்.
முகாமுக்கு கல்லூரி முதல்வர் தா. மணி தலைமை வகித்தார்.

source : Dinamani