Nagaratharonline.com
 
ATM செயல்படாததால் திருப்புத்தூரில் திண்டாட்டம்  Sep 4, 11
 
திருப்புத்தூர் நகரில் அவ்வப்போது ஏ.டி. எம்.,கள் செயல்படாததால் பொதுமக்கள் பணம் எடுப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
நகரில் ஐ.சி.ஐ.சி.ஐ., இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, ஐ.ஓ.பி, ஆகிய வங்கிகளுக்கான ஏ.டி.எம்.,கள் செயல்படுகின்றன.இவற்றின் பயன்பாடுஅதிகரித்துள்ளதால் ஸ்டேட் வங்கி கூடுதலாக ஒரு ஏடிஎம்மையும் திறந்துள்ளது.

சில வங்கிகளின் ஏடிஎம்கள் பணம் இல்லாதது, சர்வர் வேலை செய்யாதது, இன்டர்நெட் பிரச்னை உட்பட பல காரணங்கள் செயல்படாமல் போய் விடுகிறது.குறிப்பாக விடுமுறை நாட்கள்,அதற்கடுத்த நாட்களில் இந்த பிரச்னை அதிகமாக உள்ளது.வங்கிகளின் உயரதிகாரிகள் இப்பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source : Dinamalar