Nagaratharonline.com
 
திருப்புத்தூரில் மழையில் நனையும் பயணிகளுக்கு தீர்வு அவசியம்  Sep 4, 11
 
திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் மழையில் நனைந்து அவதிப்படும் பயணிகளை காப்பாற்ற தற்காலிக நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும். பஸ் ஸ்டாண்டில் பயணிகள் இறங்கி செல்லும் இடத்தில் கூரை வசதி ஏதுமில்லை.

இது வரை வெயிலில் அவதிப்பட்ட பயணிகள் தற்போது கடந்த ஒரு மாதமாக மழையில் நனையத்துவங்கியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் படும் அவதி சொல்லி மாளாது. மழையில் நனையாமல் காத்திருந்து செல்ல பயணிகள் நிழற்கூடாரம் இல்லாததால் உடன் ஆட்டோவில் செல்ல வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க பயணிகளுக்கு தற்காலிக பயணி நிழற் கூடத்திற்கு ஏற்பாடு செய்ய பேரூராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும்.

source ; Dinamalar