Nagaratharonline.com
 
மானா​ம​துரை: ப்ரத்​யங்​கிரா தேவி கோயி​லில் அமா​வாசை யாகம்  Nov 19, 09
 
மானா​ம​துரை,​ நவ.17:​ சிவ​கங்கை மாவட்​டம் மானா​ம​துரை வேதி​ய​ரேந்​தல் விலக்கு பகு​தி​யில் அமைந்​துள்ள பஞ்​ச​முக ப்ரத்​யங்​கிரா தேவி கோயி​லில் திங்​கள்​கி​ழமை இரவு கார்த்​திகை மாத அமா​வாசை யாகம் நடை​பெற்​றது.

​ உலக மக்​கள் அனைத்து செல்​வங்​க​ளை​யும் பெற்று வாழ வேண்டி நடந்த இந்த யாகத்​தில் ஏரா​ள​மா​னோர் கலந்து கொண்​ட​னர்.

​ யாகத்​தில் பட்​டுப் புட​வை​கள்,​ மாலை​கள்,​ மிளகு,​ பழ வகை​கள் உள்​ளிட்ட பல்​வேறு பொருள்​கள் இடப்​பட்​டன. யாகத்​தின் நிறை​வாக பூர்​ணா​குதி நடை​பெற்று முடிந்​த​தும் பிரத்​யங்​கிரா தேவிக்கு தீப ஆரா​தனை நடை​பெற்​றது.

​ இதற்​கான ஏற்​பா​டு​களை பஞ்​ச​முக ப்ரத்​யங்​கிரா வேத தர்ம டிரஸ்ட் நிர்​வா​கம் செய்​தி​ருந்​தது.

​ அமா​வாசை யாகத்தை முன்​னிட்டு ப்ரத்​யங்​கிரா தேவி கோயி​லுக்கு அரசு சிறப்பு பஸ்​கள் இயக்​கப்​பட்​டன.

Source: Dinamani 19/11/09