Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி ; நுகர்வோர் மன்ற விழா  Sep 2, 11
 
மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்ற விழா அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட நுகர்வோர் மன்றப் பொதுச் செயலர் தனவேலு பேசியது:
நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். உணவுப் பொருள்கள், மருந்துகளில் அரசு முத்திரை உள்ளதா, காலாவதியாகாமல் உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். கவர்ச்சியான விளம்பரங்களால் ஆசைப்பட்டு போலியான பொருள்களை வாங்கி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.
நுகர்வோர் மன்றத் துணைத் தலைவர் ஆர்.யூ. ராமன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அ. கருப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

source : Dinamani