Nagaratharonline.com
 
தேவகோட்டை நகரத்தார் சார்பாக சிவல்புரி சிங்காரத்துக்கு கிரிவல வேந்தன் பட்டம்  Aug 29, 11
 
தேவகோட்டை நகரில் கந்தர் சஷ்டி விழா கழக மண்டபத்தில்தமிழ் பணிகளாலும், ஆன்மீகப் பணிகளாலும் நகரத்தார் சமூகத்திற்கு பெருமை சேர்த்து வரும் கவிஞர் சிவல்புரி சிங்காரத்துக்கு தேவகோட்டை நகரத்தார் சங்கம் சார்பாக கிரிவல வேந்தன் பட்டமளித்து பாராட்டும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு தேவகோட்டை ஜமீன்தார் காளைராஜா செட்டியார் தலைமை தாங்கி னார். தேவகோட்டை நகர சிவன் கோவில் மேனேஜிங் டிரஸ்டி சோம. சுவாமிநாதன் வரவேற்றார். கவிஞர் சிவல் புரி சிங்காரத்தின் எழுத்து பணியை பற்றி கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் பேசினார். கவிஞர் சிவல்புரியின் கிரிவல பணிகளை நாகப் பன் எடுத்துரைத்தார்.முனைவர் சிங்கார வடி வேலன் கவிதை வடிவில் வாழ்த்துரை வழங்கினார்.

மதுரை டால்பின் மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஏ.ஆர்.ராமநாதன், கவிஞர் சிவல்புரி சிங்காரத்துக்கு வெள்ளி கேடயத்தில் கிரிவல வேந்தன் என்ற பட்டத்தை வழங்கி வாழ்த்திப் பேசினார். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மலர் கிரீடம் சூட்டி, கிரிவல பேரரசு பட்டம் பெற வாழ்த்து தெரிவித்தார்.

கவிஞர் சிவல்புரி சிங்காரம் ஏற்புரை வழங்கினார். முடிவில் ஜம்புலிங்கம் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தேவகோட்டை நகரத்தார் பெருமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 24 பேர் கொண்ட குழு அமைத்து சிறப்பாக செய்திருந்தனர்.

source : Maalaimalar