Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் கஜமுகாசூர சம்ஹாரம்  Aug 29, 11
 
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழாவையொட்டி கஜமுகாசூர சம்ஹார நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிள்ளையார்பட்டியில் சதுர்த்திப் பெருவிழா இம்மாதம் 23-ம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆறாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை கஜமுகாசூர சம்ஹாரம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு உற்சவர் மற்றும் சண்டீஸ்வரர், கோயில் பிரகாரத்தை வலம் வந்தனர். முன்னதாக கஜமுகாசூரன் கோயில் குளத்தருகே உற்சவரை எதிர்கொண்டு நின்றிருக்க, உற்சவரான விநாயகர் தனது தந்தத்தால் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாட்டை கற்பக விநாயகர் கோயில் அறங்காவலர்கள் தேவகோட்டை வெ.ராமநாதன், அமராவதிபுதூர் ராம.சிதம்பரம் ஆகியோர் செய்திருந்தனர்.

source : Dinamani