Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்றம் - சென்னை ...துவக்கம்  Aug 28, 11
 
 
 
சென்னை, திருவான்மியூர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் வசிக்கும் நகரத்தார்கள் இணைந்து, 21/08/2011 அன்று
"நகரத்தார் நற்பணி மன்றம் - சென்னை" என்ற அமைப்பினை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
நகரத்தார்கள் அவ்வப்போது ஒன்றுகூடி, உரையாடி, உறவாடி, மகிழவும், கலை, இலக்கிய, சமுதாய, ஆன்மிக, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்திக் களிக்கும் பொருட்டும் சிறுவர் சிறுமியர்
இளைஞர்களிடம் காணப்படும் திறமையைக் கண்டறிந்து, ஊக்கும்விக்கும்பொருட்டும் மாணவ மாணவியருக்கு முன்னேற்றப் பயிற்சிகள் பல அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, புதிய செயல்முறைகளோடு செயல்பட துவங்கியிருக்கிறது.

Dr.M.சீனிவாசன் (நற்சாந்துபட்டி) தலைவராகவும், MR அழகப்பன் (கல்லல்) துணைத் தலைவராகவும், AR சுப்பிரமணியன் (மதகுபட்டி) செயலாளராகவும், N. வேலாயுதம் ( பாகனேரி ) இணைச் செயலாளராகவும், முரு . பெரியகருப்பன் (நெற்குப்பை) பொருளாளராகவும், மன்ற ஆலோசகர்களாக,
கரு.சுந்தர மகாலிங்கம் (வலையபட்டி) மற்றும் Prof.AL. குமரப்பன் (காரைக்குடி) ஆகியோர் ஒருமனதாக தெரிந்தெடுக்கப்பட்டனர் .

உறுப்பினர் வகையும் கட்டணத் தொகையும் :

புரவலர் (Patron) : Rs.1001/-
வாழ்நாள் (Life) : Rs. 501/-
ஆண்டு சந்தா : Rs. 101/-

"நற்பணியில் பங்குபெற வாரீர்"

தொடர்புக்கு : நகரத்தார் நற்பணி மன்றம் - சென்னை,
59, பாஸ் அவின்யூ , 3/621,கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் சென்னை 600 041,
mobile : 988 4040 156

e mail : nagaratharnarpani@gmail.com

Click here to download membership application form. Print and fill it and send it to us.

Application Form