Nagaratharonline.com
 
இருளில் கானாடுகாத்தான்  Aug 24, 11
 
கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களாக தெரு விளக்குகள் எரியாததால் அப்பகுதியினர் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து போகும் கானாடுகாத்தானில் பாரம்பரிய பழமையான செட்டிநாடு பங்களாக்கள் அதிகளவு உள்ளன. கானாடுகாத்தான் பேரூராட்சி சார்பில் முக்கிய தெருக்களில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 3, 4, 5 வார்டுக்குட்பட்ட கே.எம்., ரோடு, கொத்தமங்கலம் ரோடு, வசந்தம் நகர் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை. மாலை நேரங்களில் டியூசன் செல்லும் பள்ளி மாணவர்கள், இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் தொழிலாளர்கள் பலரும் அச்சத்துடன் நடமாட வேண்டிய அவலம் உள்ளது.அப்பகுதி மக்கள் பேரூராட்சியில் புகார் தெரிவித்தால், மின்வாரியம் தான் இதற்கு பொறுப்பு என பதிலளித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த பகுதியில் முன்புபோல் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

source : Dinamalar