Nagaratharonline.com
 
காரைக்குடியில் "பல்லாங்குழி' ரோடுகளால் அவதி  Aug 21, 11
 
காரைக்குடி நகரின் முக்கிய வீதிகளில் "பல்லாங்குழி' ரோடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.நகரின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதையடுத்து போக்குவரத்து நெரிசலும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் குண்டும் குழி, சேதமடைந்த ரோடுகளால் வாகன ஓட்டிகளும்,பாதசாரிகளும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக, பழைய போலீஸ் ஸ்டேஷன் ரோடு, செக்காலை நான்காவது வீதி முக்கு ரோடு, தாலுகா ரோடு, கோர்ட் வாசல் முன்பு, நூறடி ரோடு, கழனிவாசல் போன்ற இடங்களில் ரோடு "படு மோசமாக' உள்ளது. இரவு நேரங்களில் டூ வீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. சைக்கிளில் செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.

source : Dinamalar