Nagaratharonline.com
 
தேவகோட்டை தொடர் கொள்ளை எதிரொலி : இன்ஸ்பெக்டர் மாற்றம்  Aug 12, 11
 
தேவகோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைக்கடை உட்பட பல்வேறு இடங்களில் நடந்த கொள்ளையையடுத்து இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். தேவகோட்டையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 6 இடங்களில் கொள்ளை நடந்தது. சம்பவ இடத்தை ராமநாதபுரம் டி.ஐ. ஜி சந்தீப்மித்தேல், எஸ்.பி. பன்னீர் செல்வம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். போலீசார் பணிகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து தேவகோட்டை டவுன் இன்ஸ்பெக்டராக இருந்த செல்வகுமார் தேவகோட்டை தாலுகாவிற்கு குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டார். சேலம் டவுன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அசோகன் தேவகோட்டை டவுன் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் அசோகன் உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

source : Dinamalar