Nagaratharonline.com
 
வைரவன்பட்டி கோயிலுக்கு புதிய தேர்  Nov 15, 09
 
திருப்புத்தூர் அருகே என்.வைரவன்பட்டி கோயிலுக்கு புதிய தேர் செய்ய நகரத்தார் சங்க கூட்டத்தில் முடிவானது.தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். செயலர் ஏ.எஸ். வெங்கடாசலம் முன் னிலை வகித்தார். வைரவர் சுவாமிக்கு புதிய தேர் செய்யவும், ஆடி மாதத்தில் நடைபெறும் விழாவில் தேரோட்டம் நடத்தவும் முடிவானது.
மரங்கள் வளர்க்க 'கற்பக விருட்சம்' என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகமானது. 25 ஆயிரம் மரங்களை கோயில் பின்புறம் உள்ள 11 ஏக்கர் நிலத்தில் வளர்க்கவும் முடிவானது.துணைத் தலைவர் எம்.லட்சுமணன், இணை செயலாளர் பழனியப்பன், பொருளாளர் ராமசாமி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

source : Dinamalar 16/11/09