Nagaratharonline.com
 
வைரவன்பட்டி திருவிழா தேரோட்டம்  Aug 4, 11
 
வைரவன்பட்டியில் வைரவசாமி மகா உற்சவத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
வைரவன்பட்டி வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் திருக்கோயிலில் கடந்த ஜூலை 25-ம் தேதி கணபதி ஹோமத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் கலை விழா மற்றும் சாமி புறப்பாடு நடைபெற்றது.
9-ம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு திருத்தேரில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணியளவில் தேர் புறப்பாடு நடைபெற்று, இரவு 8 மணிக்கு நிலையை அடைந்தது.
புதன்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

source ; Dinamani