Nagaratharonline.com
 
40 ஆண்டுக்கு பிறகு தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்  Aug 3, 11
 
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழா, நாளை துவங்குகிறது. காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கும். ஆக., 11 மாலை 6.30 மணிக்கு, திருக்கல்யாணம், இரவில் பூப்பல்லக்கு; ஆக., 13 காலை திருத்தேருக்கு புறப்பாடு, மாலை 3 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஆக., 15 காலை தீர்த்தவாரி, மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கவுள்ளது. தினமும் வாகனங்களில் சுவாமி புறப்பாடு வருவார்.

40 ஆண்டுக்கு பின், தேரோட்டம் நடப்பதால், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

source : dinamalar