Nagaratharonline.com
 
தீபாவளி : தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் "ஹவுஸ் புல்'  Jul 23, 11
 
தீபாவளிக்காக ரயில்களில் முன்பதிவு துவங்கிய அரை மணி நேரத்தில், தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அதிகபட்சமாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 225 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.தீபாவளி பண்டிகை அக்., 26ம் தேதி புதன் கிழமை கொண்டாடப்படுகிறது.

இதற்காக, ரயில்களில் முன்பதிவு வசதி நேற்று முதல் துவங்கியது. அக்., 21ம் தேதி வெள்ளிக்கிழமை பயணிப்பதற்காக, முன்பதிவு நேற்று நடந்தது.சிலர் முதல் நாள் இரவே, முன்பதிவு மையங்களில் முகாமிட்டனர்; பலர் அதிகாலையில் வந்தனர். காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கியதும், அரை மணி நேரத்தில் தென்மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் பாண்டியன், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிரம்பிவிட்டன.

source : Dinamalar