Nagaratharonline.com
 
பொன்னமராவதி நக​ரில் சுகா​தா​ரக்​கேடு அபாயம்  Jul 22, 11
 
பொன்​ன​ம​ரா​வதி,​​ ஜூலை 21: பொன்​ன​ம​ரா​வதி பேரூ​ராட்​சிக்​குள்​பட்ட வார்​டு​க​ளில் சேக​ரிக்​கப்​ப​டும் குப்​பை​களை நக​ருக்​குள்​ளேயே கொட்டி எரிப்​ப​தால் சுகா​தாக்​கேடு ஏற்​பட்​டுள்​ளது.​
பொன்​ன​ம​ரா​வதி தேர்​வு​நி​லைப் பேரூ​ராட்​சி​யில் 15 வார்​டு​கள் உள்​ளன.​ இந்த வார்​டு​க​ளில் சேக​ரிக்​கப்​ப​டும் குப்​பை​கள் பொன்​ன​ம​ரா​வதி அழ​கப்பா அம்​ப​ல​கா​ரர் சாலை​யோ​ரத்​தி​லும்,​​ புதுப்​பட்டி மலை​யாண்டி கோயில் சாலை​யோ​ரத்​தி​லும்,​​ திரு​மே​னிக் கண்​மாய் கரை​யோ​ரத்​தி​லும் கொட்​டப்​ப​டு​கின்​றன.​
இத​னால்,​​ இந்​தப் பகுதி முழு​வ​தும் துர்​நாற்​றம் வீசு​கி​றது.​ மேலும்,​​ குப்​பை​களை அங்​கேயே வைத்து எரி​யூட்​டு​வ​தால் அந்​தப் பகு​தியே புகை மண்​ட​ல​மா​கி​வி​டு​கி​றது.
மேலும்,​​ சுற்​றுச்​சூ​ழல் சீர்​கேடு அடைந்து,​​ தொற்று நோய் பர​வும் அபா​யம் உள்​ளது.​
துர்​நாற்​றம் கார​ண​மாக பொது​மக்​கள் இந்​தச் சாலை​க​ளில் நிம்​ம​தி​யா​கச் செல்ல முடி​ய​வில்லை.​ ஓட்​ட​மும்,​​ அதி​வேக நடை​யு​மா​கவே செல்ல வேண்​டி​யுள்​ளது.​ குறிப்​பாக,​​ குழந்​தை​கள்,​​ முதி​ய​வர்​க​ளின் பெரும் அவ​திக்​குள்​ளா​கின்​ற​னர்.​
மேலும்,​​ மழைக் காலங்​க​ளில் அந்​தச் சாலை வழி​யாக யாரும் செல்ல முடி​யாத அள​வுக்கு துர்​நாற்​றம் வீசு​கி​றது.​ எனவே,​​ பேரூ​ராட்சி நிர்​வா​கத்​தி​னர் குப்​பை​களை நக​ருக்கு வெளியே கொட்டி,​​ அழிக்க வேண்​டும் என்று பொது​மக்​கள் எதிர்​பார்க்​கின்​ற​னர்.​
இது​தொ​டர்​பாக தமிழ்​நாடு விவ​சா​யி​கள் சங்க ஒன்​றி​யச் செய​லர் ராஜா கூறி​யது:​
பொன்​ன​ம​ரா​வதி-​ மதுரை சாலை​யில் உள்ள திரு​மே​னிக் கண்​மாய் ஓரத்​தில் கொட்​டப்​ப​டும் குப்பை,​​ மருத்​து​வ​ம​னைக் கழி​வு​க​ளால் சுகா​தா​ரக்​கேடு ஏற்​ப​டு​கி​றது.​ அவ்​வப்​போது,​ ​ குப்​பை​களை எரி​யூட்​டு​வ​தால் எழும் புகை மண்​ட​லம் கார​ண​மாக போக்​கு​வ​ரத்து பாதிக்​கப்​ப​டு​கி​றது.​ பொது​மக்​க​ளும் பாதிக்​கப்​ப​டு​கின்​ற​னர்.​ இந்த பிரச்​னை​யில் பேரூ​ராட்சி நிர்​வா​கம் தொடர்ந்து அலட்​சி​ய​மாக இருந்​தால் மக்​கள் நோய் பாதிப்​புக்கு ஆளாக நேரி​டும்.​
எனவே,​​ பேரூ​ராட்சி நிர்​வா​கத்​தி​னர் குப்​பை​களை நக​ருக்கு வெளியே கொட்டி அழிக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்​றார் அவர்.​

Source:Dinamani