Nagaratharonline.com
 
சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை  Jul 21, 11
 
சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 25ம் தேதி ஆடிக்கிருத்திகையை யொட்டி, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. கவரப்பேட்டை அருகேயுள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி, நகரத்தார் சிறுவாபுரி பாதயாத்திரை டிரஸ்ட் சார்பில் 22ம் ஆண்டு பாதயாத்திரை நடக்கிறது.

திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோவிலில் 23ம் தேதி காவடிகள், பால்குடங்கள் ஏந்தி பக்தர்கள் சிறுவாபுரிக்கு பாதயாத்திரை வருகின்றனர். 25ம் தேதி காலை 10 மணிக்கு பால்குட அபிஷேகம் நடக்கிறது. ஆடிக்கிருத்திகையையொட்டி கோயம்பேட்டிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

source ; Dinamalar