Nagaratharonline.com
 
வயிரவன்பட்டி கோயில் விழா ஜூலை 25ல் துவக்கம்  Jul 18, 11
 
வயிரவன்பட்டி வளரொளிநாதர் உடனாய வடிவுடையம்மை, வயிரவர் கோயில் விழா வரும் 25 ம் தேதி துவங்குகிறது. நகரத்தார்களின் ஒன்பது திருக்கோயில்களில் ஒன்றான வயிரவர் கோயிலில் ஆடி மாதம் 11 நாட்கள் மகா உற்சவம் நடைபெறும். ஜூலை 25ம் தேதியன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் உற்சவம் துவங்கும். தினசரி காலை 8.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவு8 மணிக்கு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். ஒன்பதாம் நாள் திருவிழாவாக ஆக. 2 ம் தேதியன்று தேரோட்டம் நடைபெறும். 10ம் நாள் காலையில் அனைத்து சுவாமிகளுக்கு அபிஷேகமும் இரவில் பூப்பல்லக்கில் வீதி உலாவும் நடைபெறும். 11 வது நாளன்று காலையில் தீர்த்தவாரியும், திருக்கல்யாணமும் நடைபெறும். இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறும். 11 நாளும் மாலையில் சொற்பொழிவு,இசை,பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

source : Dinamalar