Nagaratharonline.com
 
மஞ்சுவிரட்டில் அடங்காத, நெற்குப்பை கோயில் காளை இறந்தது :பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி  Jul 18, 11
 
நெற்குப்பையில், நேற்று முன் தினம் இறந்த கோயில் காளையை மாலை மரியாதையுடன் கிராமத்தினர் அடக்கம் செய்தனர். சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் சேவுக மூர்த்தி கோயிலில் "காளை' வளர்க்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல மஞ்சுவிரட்டுகளில் இக்காளை பங்கேற்று, பிடிபடாமல் மக்களின் அன்பைப் பெற்றிருந்தது. இக்காளை வளர்ப்பிற்கென்று தனியாக தோட்டமும் உண்டு.

அவ்வாறு வளர்க்கப்பட்ட கோயில் காளை நேற்று முன் தினம் இறந்தது. இத்தகவலை கேட்ட பலரும் வருத்தத்துடன் வந்து மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் பரியாமருதிப்பட்டியில் கோயில் அருகே காளை மாலை, மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

source : Dinamalar