Nagaratharonline.com
 
ஜூலை 13 : சக்கந்தியில் மனுநீதி நாள்  Jul 9, 11
 
தேவகோட்டை வட்டம், சக்கந்தி கிராமத்தில் ஜூலை 13 ஆம் தேதி (புதன்கிழமை) பகல் 11 மணிக்கு மனு நீதி நாள் முகாம் நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியர் தலைமை வகிக்கிறார். இம் முகாமில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளான பட்டா மாறுதல், வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, முதல்வரின் பொது நிவாரண நிதி, குடிநீர் வசதி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கல்விக் கடன் மற்றும் பொதுப் பிரச்னை தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கொடுத்து பயனடையலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : dinamani