Nagaratharonline.com
 
காஸ் இணைப்பு விபரத்தை ரேஷன் கார்டில் பதிவு செய்ய ஆக., 15 வரை அவகாசம்  Jul 6, 11
 
பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொண்டு ரேஷன் கார்டில் சமையல் காஸ் இணைப்புக்கான முத்திரை ஏற்கனவே பதிவு செய்துள்ள ரேஷன் கார்டுதாரர்கள் சமையல் காஸ் ஏஜன்சி நிறுவனத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டியதில்லை. ஒரு சிலிண்டர் இணைப்பு மற்றும் இரண்டு சிலிண்டர் இணைப்பு வைத்துக்கொண்டு ரேஷன் கார்டுகளில் பதிவு செய்யாத ரேஷன்கார்டுதாரர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க செல்லும் போது அல்லது சமையல் காஸ் ஏஜன்சி அலுவலகத்திலோ முத்திரையிட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சமையல் காஸ் சிலிண்டர் வேண்டி பதிவு செய்யும்போது ரேஷன் கார்டுகளில் முத்திரை பதிவு செய்து கொள்ள வேண்டும். ரேஷன் கார்டில் முத்திரையிடாதவர்களுக்கு தற்போது காஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் எப்போதும் போன்று வழங்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : Dinamalar