Nagaratharonline.com
 
காரைக்குடி-சென்னைக்கு கூடுதல் பஸ் விட கோரிக்கை  Jun 29, 11
 
அரசு போக்குவரத்து கழகம்(காரைக்குடி மண்டலம்) சார்பில் காரைக்குடியில் இருந்து தினமும் இரவு 7.45 முதல் 8.30 மணி வரை மூன்று அரசு விரைவு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. அதேபோன்று அங்கிருந்தும் காரைக்குடிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.பாதுகாப்பு, கட்டணம் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் பயணிகள் இந்த பஸ்களில் முண்டி அடித்து பயணிப்பது வாடிக்கையாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவயலில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், அரிசி ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, காரைக்குடி மக்களின் நலன் கருதி சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source : Dinamalar