Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா  Jun 24, 11
 
கண்டவராயன்பட்டியில் பேராசிரியர் குமரப்பன் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் குமரப்பன் எழுதிய "காசி முதல் மன்னார் வளைகுடா வரை' என்ற நூலை, காளைராஜா செட்டியார் வெளியிட, காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திர மேலாண்மைக் கழகத் தலைவர் சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.
இந்த நூலில் காசி நகரச் சரித்திரம், அயல்நாடுகளில் நகரத்தார் கட்டிய கோயில்கள், நடைபெறும் திருவிழாக்கள், நானோ தொழில்நுட்பம் குறித்த தகவல்கள், மன்னார் வளைகுடா மற்றும் தமிழ் இலக்கியம் குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக பேராசிரியர் குமரப்பன் தெரிவித்தார்.
விழாவில், சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் செந்தில்நாதன், தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமி, சாக்கோட்டை ஒன்றியத் தலைவர் முத்துராமலிங்கம் பேராசிரியர் முத்தையா, காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் முத்து பழனியப்பன், ஈரோடு நகரத்தார் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியன், நகரத்தார் பள்ளிகளின் செயலாளர் ராமநாதன், அரசு தலைமை மருத்துவர் ராஜூ, கவிஞர் நாச்சியப்பன் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.

source ; dinamani