Nagaratharonline.com
 
ஜாதிச்சான்றுக்கு ரூ.3,000 லஞ்சம் நாட்டரசன்கோட்டை ஆர்.ஐ., கைது  Jun 22, 11
 
நாட்டரசன்கோட்டையில் ஜாதிச்சான்று வழங்க, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ., செந்தில்குமாரை, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் மீனாள். இவரது மகள் சுகன்யா (15). பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். பிளஸ் 1ல் சேர்க்க ஜாதி சான்று கேட்டு, அப்பகுதி ஆர்.ஐ., செந்தில்குமாரிடம் மனு கொடுத்தார். சான்றிதழ் வழங்க 5,000 ரூபாய் தருமாறு ஆர்.ஐ.,கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்த மீனாள், முதல் தவணையாக 3,000 ரூபாயும், சான்று பெறும் போது 2,000 ரூபாயும் தருவதாக தெரிவித்தார்.

இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசிலும் மீனாள் புகார் செய்தார். மீனாளின் கணவர் விஸ்வநாதன் திருவாடானையில் தலையாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது. அவர் இறந்துவிட்டார். சிக்கிய ஆர்.ஐ.,: போலீஸ் ஆலோசனைப்படி, நேற்று பகல் 1.10 மணிக்கு அலுவலகத்தில் இருந்த செந்தில்குமாரிடம் 3,000 ரூபாய் கொடுத்தார். அங்கு, மறைந்திருந்த டி.எஸ்.பி., அருளானந்தம், இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், ராஜா, சிறப்பு எஸ்.ஐ., கருப்பணபிள்ளை, ஏட்டு மைக்கேல், போலீசார் முருகன் ஆகியோர் ஆர்.ஐ., செந்தில்குமாரை பிடித்து, கைது செய்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

source : Dinamalar