Nagaratharonline.com
 
காரைக்குடி டி.டி.நகர் கற்பகப் பிள்ளையார் கோயில் குடமுழுக்கு  Jun 14, 11
 
காரைக்குடி, ஜூன் 12: காரைக்குடி டி.டி.நகர் அருள்மிகு கற்பகப் பிள்ளையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இக்கோயிலில் பணிகள் நிறைவுற்று குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற நான்காம் கால யாக பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை காலையில் நிறைவடைந்து பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றன. காலை 9.42 மணிக்கு குடமுழுக்கு நடை பெற்றது.
விழாவில் கோவிலூர் நாச்சியப்ப ஞானதேசிக சுவாமிகள், சென்னை காவல் துறைத் தலைவர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Source:Dinamani