Nagaratharonline.com
 
ஒக்கூருக்கு சிறப்பு பஸ் : மக்கள் எதிர்பார்ப்பு  Jun 7, 11
 
ஒக்கூரை மையமாக வைத்து கருங்காபட்டி, மேலமங்கலம், விடனேரி, பிரவனூர், கிழப்பூங்குடி, மேலபூங்குடி, ஓ.புதூர், ஒக்கூர் அண்ணாநகர் உள்ளிட்ட 16 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் கிராமத்தினர் சிவகங்கை வர இந்த வழியாக வரும் திருப்புத்தூர் செல்லும் பஸ்களையே நம்பி உள்ளனர்.

கூட்டம் அதிகம் இருக்கும் போது இந்த வழியாக செல்லும் பஸ்கள் ஒக்கூரில் நிற்பதில்லை.பள்ளி மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஓக்கூரை சேர்ந்த கருத்தக்கண்ணன் கூறுகையில்,"" ஒக்கூரில் இருந்து சிவகங்கை, திருப்பத்தூர் செல்ல பஸ்சிற்கு காத்து கிடக்க வேண்டியதுள்ளது. ஒக்கூர் வழியாக செல்லும் அரசு பஸ்களில் ஏறினால் கண்டக்டர்கள் திட்டுகின்றனர். மீறி ஏறினால் ஒக்கூரில் நிறுத்துவது கிடையாது. காலை, மாலை நேரத்தில் மட்டுமாவது ஒக்கூருக்குகென சிவகங்கை, திருப்புத்தூரில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்ய வேண்டும்,'' என்றார்.

source : Dinamalar