Nagaratharonline.com
 
பொன்னமராவதி: மின் மோட்டார்களை திருடியதாக இருவர் கைது  Jun 3, 11
 
பொன்னமராவதி, ஜூன் 1: பொன்னமராவதி அருகே கிணறுகளில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்களை திருடியதாக இருவரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பொன்னமராவதி போலீஸôர் புதுக்கோட்டை பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனர்.
அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த புல்வயல் சாந்துப்பட்டி சிவா என்ற பழனிச்சாமி, பரம்பூர் சிலம்பரம் என்ற சிதம்பரம் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், மரவாமதுரை, சடையம்பட்டி, காயாம்பட்டி உள்பட 4 இடங்களில் விவசாயத்துக்காக கிணறுகளில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்களை அவர்கள் இருவரும் திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸôர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்