Nagaratharonline.com
 
50 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய மாணவர்கள் சந்திப்பு  Jun 1, 11
 
பொன்னமராவதி, மே 29: பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் 1961 ஆம் ஆண்டு பதினொறாம் வகுப்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அந்தப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு திருச்சி நாகப்பா குழுமத் தலைவர் நா. இலக்குமணன் தலைமை வகித்தார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ் கல்லூரி முதல்வர் தா.மணி சிறப்புரையாற்றினார். விழாவில் இப் பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர்.

பள்ளியின் தலைவர் வயி. வைரவன், பள்ளியின் செயலர் வடு.கும. இலக்குமணன், க. ராமசாமி, கா.சிவலிங்கம், அழ. அண்ணாமலை, வெ. தியாகராஜன், கும. வள்ளியப்பன், சொ. கணபதி, மெ. அழகன், ப. சிங்காரம், சுப. சொக்கலிங்கம், பொ. ரவீந்திரன், ஆசிரியர் கருப்பையா ஆகியோர் பாராட்டிப் பேசினர்.
இந்தப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களான எம். நாராயணன், எ. தேவராஜன், எஸ். சீனிவாசன், சி. ராமசாமி, எஸ். ராமலிங்கம் ஆகியோருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக கரு. சிங்காரவேல் வரவேற்றார்.

Source:Dinamani