Nagaratharonline.com
 
டாக்டர்கள் இல்லாத நெற்குப்பை வட்டார சுகாதார நிலையம்  May 29, 11
 
திருப்புத்தூர் ஒன்றியம் நெற்குப்பை வட்டார சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்புத்தூர் ஒன்றியம் நெற்குப்பையில் வட்டார சுகாதார நிலையம் உள்ளது.

நெற்குப்பை நிலையத்தில் நான்கு டாக்டர்கள் இருக்க வேண்டும். ஒரு மருத்துவ அலுவலர் மட்டுமே உள்ளார். கண்காணிப்பு பணியை விட்டு விட்டு அவரே நோயாளிகளை கவனிக்க வேண்டியுள்ளது. நெற்குப்பையில் மொபைல் ஆம்புலன்ஸ் இருந்தும் கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் பயனில்லாமல் உள்ளது

கீழச்சிவல்பட்டி,திருக்கோஷ்டியூர்,நெற்குப்பை 3 இடங்களிலும் லேப் வசதி உள்ளது. ஆனால் லேப் டெக்னீசியன் பணியிடம் காலியாக உள்ளது.

source : Dinamalar