Nagaratharonline.com
 
செட்டிநாடு கட்டடப் பொருள்கள் கண்காட்சி துவக்கம்  May 29, 11
 
காரைக்குடியில் கட்டடப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை துவங்கியது. இக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (மே 29) வரை நடைபெறுகிறது.

கட்டடப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் முதன்முறையாக காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் இக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இக் கண்காட்சியில் சிமெண்ட், கம்பி, செங்கல், கிரானைட், மார்பிள், டைல்ஸ் மற்றும் நவீன வீட்டு அலங்காரப் பொருள்களுக்கான 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சேது. சுடலைமுத்து துவக்கி வைத்தார்

source : Dinamani