Nagaratharonline.com
 
திருப்பரங்குன்றம் : கும்பாபிஷேகம் ஒத்தி வைப்பா?  May 29, 11
 
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 6 ல் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது 5 கோடி ரூபாயில் பணி நடக்கிறது. நேற்று மாலை 6 மணிக்கு பூர்வாங்க பூஜை துவங்குவதாக இருந்தது; நடைபெறவில்லை. ஜூன் 2 ல் யாகசாலை பூஜை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு ஜூன் 1 க்குள் வந்தால் தான் பூஜை துவங்கும். இல்லையெனில், கும்பாபிஷேகம் வேறொரு நாளில் நடக்க வாய்ப்புள்ளது.

ஆட்சி மாற்றத்தால் அதிகாரிகள் தெளிவான முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

source ;Dinamalar