Nagaratharonline.com
 
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்  May 27, 11
 
தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை நகரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்கு ஆள்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதால், தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கபில்குமார் சி சரட்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் நகரத்துக்கு தஞ்சாவூர் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவிலும், கும்பகோணம் நகரத்துக்கு கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவிலும், பட்டுக்கோட்டை நகரத்துக்கு பட்டுக்கோட்டை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவிலும் ஜூன் 6 காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் இளங்கலை பட்டப்படிப்பு, வயது 25 முதல் 45 வரை, 170 செ.மீ உயரம் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் போக்குவரத்து பிரிவு ஆய்வாளரை 9344216772, கும்பகோணம் ஆய்வாளரை 9788058519, பட்டுக்கோட்டை ஆய்வாளரை 9442403295 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

source : Dinamani