Nagaratharonline.com
 
காவல்துறையின் உத்தரவால் ஹெல்மெட் விற்பனை அதிகரிப்பு  May 26, 11
 
சென்னையில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர், நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டுமென்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, சென்னையில் ஹெல்மெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

நாளை முதல் சென்னை நகரில் ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவுள்ளது

இரு சக்கர வாகனங்களில் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். பின்னால் அமரும் பெண்கள் மற்றும் குழந்தைக்கு ஹெல்மெட் அணிவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

source : Dinamalar