Nagaratharonline.com
 
நெற்குப்பை நகரத்தார் கையேடு வெளியீடு  May 26, 11
 
நெற்குப்பை நகர சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்குப்புற மண்டபத்தில் 22/05/2011 அன்று மாலை 4 மணி அளவில் நகரத்தார் பெருமக்கள் முன்னிலையில்,.திரு PL வைரவன் மற்றும் திரு. M. திருநாவுக்கரசு ஆகியோர் பெருமுயற்சியில் உருவான மூன்றாவது நகரத்தார் கையேடு சிறப்பாக வெளியிடப்பட்டது.

திரு. தமிழண்ணல், திரு.ந. மு.ஆறு. கனகசபை செட்டியார் மற்றும் பல நகரத்தார் பெருமக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

நன்கொடை செய்த நகரத்தார்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

நகரத்தார் கையேட்டை எல்லா விபரங்களுடன் அழகாக இணைந்து தயாரித்த திரு PL வைரவன் மற்றும் திரு. M. திருநாவுக்கரசு ஆகியோரை அனைவரும் பாராட்டினர்.

Editor, nagarathar gateway.com