Nagaratharonline.com
 
அடையாறு இந்திரா நகர் பாலம் : ஜூன் முதல் வாரத்தில் போக்குவரத்திற்கு திறப்பு  May 25, 11
 
அடையாறு, இந்திரா நகரில் இடிந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக 3.12 கோடி ரூபாய் மதிப்பில், பக்கிங்காம் கால்வாய் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டுள்ள நான்கு வழிப்பாதை பாலம், வரும் ஜூன் முதல் வாரத்தில் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படுகிறது.இந்த பாலம், இந்திரா நகரையும், ராஜிவ்காந்தி சாலையையும் (ஒ.எம்.ஆர்) இணைக்கும்.
இது குறித்து மாநகராட்சி பாலங்கள் துறை அதிகாரி ராமநாதன் கூறியதாவது: இந்திராநகர் - ராஜிவ்காந்தி சாலையை இணைக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே, 3.12 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நான்கு வழிப்பாதை கொண்ட இப்பாலத்தின் இதன் நீளம் 19.2 மீட்டர். அகலம் 19.8 மீட்டர். பாலத்தின் இருபுறமும் 1.5 மீட்டர் அகலத்திற்கு நடைபாதை அமைக்கப்படவுள்ளது.

ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாலம் போக்குவரத்திற்காக திறந்துவிடப்படும்.

source : Dinamalar.