Nagaratharonline.com
 
அடிக்கடி கட் அடிக்கும் பொன்னமராவதி பஸ்  May 25, 11
 
மதுரையிலிருந்து சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. காலை 7. 50 மணிக்கு சிங்கம்புணரி வந்து 7.55க்கு பொன்னமராவதி புறப்படவேண்டும்.

அ.காளாப்பூர், மருதிப்பட்டி ஆ.தெக்கூர்,நெற்குப்பை வழி செல்லும் இந்த பஸ்சில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள், வங்கி,அரசு ஊழியர்கள் பலர் செல்கின்றனர். இந்த பஸ்சை விட்டுவிட்டால் காலை 11 மணிக்கு தான் பஸ் உண்டு.சில நாட்களில் பஸ் வருவதில்லை. வந்தாலும் குறித்த நேரத்தில் வராமல் தாமதமாகவோ வருகிறது. வேறு பஸ் வசதி இல்லாத இந்த வழித்தடத்தில் பஸ் நிற்காமல் குறித்த நேரத்திற்கு வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


source ; Dinamalar