Nagaratharonline.com
 
குழிபிறை சந்திக்கருப்பர் கோயிலில் பூச்சொரிதல் விழா  May 23, 11
 
புதுக்கோட்டை, மே 22: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், குழிபிறை அருள்மிகு சந்திக்கருப்பர் கோயிலில் 34 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, பனையபட்டி, செவலூர், கோவனூர், குழிபிறைப்பட்டி, மலையடிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பூத்தட்டு எடுத்துச்சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இரவு 10 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை பூப்பிரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் குழிபிறை உலகநாயகி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்கள் செய்திருந்தனர்.

Source:Dinamani