Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் சாலைகள் சீரமைக்கப்படுமா?  May 14, 11
 
பொன்னமராவதி, மே 12: பொன்னமராவதி பகுதியில் சேதமடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பொன்னமராவதி- உலகம்பட்டி சாலையில் நாட்டுக்கல் பகுதியிலும், அரசு மருத்துவமனைப் பகுதியிலும் சாலைகள் பல இடங்களில் பெயர்ந்து, குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
அதேபோல, பொன்னமராவதி பேருந்து நிலையம், பெட்ரோல் விற்பனை நிலையம் அருகேயுள்ள பிரதான சாலையில், ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர்த் திட்டத்துக்காக பதிக்கப்பட்ட குழாயிலிருந்து அடிக்கடி தண்ணீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சாலையும் சேதமடைகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன. தண்ணீர் விரயமாவதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, பொன்னமராவதியில் சேதமடைந்துள்ள அனைத்துச் சாலைகளையும் உடனடியாகச் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னமராவதி பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Source:Dinamani