Nagaratharonline.com
 
சட்டப்பேரவைத் தேர்தலில் திருநாவுக்கரசருக்கு முதல் தோல்வி  May 14, 11
 
புதுக்கோட்டை, மே 13: புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் சு. திருநாவுக்கரசர், சட்டப்பேரவைத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான அறந்தாங்கியில் முதல் முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளார்.
எம்ஜிஆரின் தீவிர தொண்டரான இவர், எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய போது அந்தக் கட்சியில் இணைந்து கொண்டார்.
1977-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவை துணைத் தலைவரானார். தொடர்ந்து, 1997 வரை 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் களம் இறங்கினார்.
இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மு. ராஜநாயகத்திடம் 16,656 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Source:Dinamani