Nagaratharonline.com
 
101-வது பிறந்த நாளைக் கொண்டாடிய சிவகாமி ஆச்சி.  May 11, 11
 
பிள்ளையார்பட்டியில் 5 தலைமுறை கண்ட ஆத்தங்குடியைச் சேர்ந்த சிவகாமி ஆச்சிக்கு தலைமுறையினர் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் அருகே ஆத்தங்குடியில் 1911-ல் பிறந்தவர் சிவகாமி ஆச்சி. கணவர் பழனியப்பன். இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

சிவகாமியின் 40-வது வயதில் அவரது கணவர் இறந்து விட்டார். மனம் தளராத சிவகாமி ஆச்சி அனைவரையும் படிக்க வைத்து மணம்முடித்து வைத்தார். தற்போது வெளியூர்களில் வசிக்கும் பேரன், பேத்திகளும் 100 வயதைக் கடந்த சிவகாமி ஆச்சிக்கு பிறந்தநாள் விழா எடுக்க முடிவு செய்தனர்.

அவர்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சிவகாமி ஆச்சியின் மகள் சீதை ஆச்சி என்பவரது வீட்டுக்கு வந்தனர்.

அனைவரும் சேர்ந்து பிள்ளையார்பட்டியில் சிவகாமி ஆச்சிக்கு 101 வது பிறந்த நாள் விழாவாக கனகாபிஷேகம் நடத்தினர்.

இந்த 101 -வது வயதிலும் சிவகாமி ஆச்சி தனது அன்றாடப் பணிகளை தானே செய்து வருகிறார். பார்வை, கேட்கும் திறன் நன்றாக இருப்பதால் டி.வி. பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

source : Dinamani