Nagaratharonline.com
 
Kumbabhishegam at Kottaiyur Velangudi Meyya Vinayagar Kovil  Sep 9, 09
 
காரைக்குடி, செப். 7: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர்-வேலங்குடி அருள்மிகு மெய்ய விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
1883-ஆம் ஆண்டு காரைக்குடி மூ.மெ. சேவுகன்செட்டியாரால் இக்கோயில் கட்டப்பட்டது.
தற்போது மூ.மெ. சேவுகன் பங்காளிகளுக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலை, புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெற்றது.
இக் குடமுழுக்கு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமம், மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, குடமுழுக்கு நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டனர்.

source : Dinamani dated 08/09/2009