Nagaratharonline.com
 
துர்நாற்றத்தில் பஸ் ஸ்டாண்ட் தேவகோட்டையில் அவதி  May 7, 11
 
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள பயணிகள் அறையை யொட்டியே கழிப்பறை உள்ளது.
பளபளப்பாக இருக்கும் கழிப்பறை பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. நிற்க முடியாத அளவிற்கு துர்நாற்றம். பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்புரவு ஊழியர் அடிக்கடி சுத்தம் செய்ததால் ஓரளவு துர்நாற்றம் குறைவாக இருந்தது. தற்போது யாரும் சுத்தம் செய்வதில்லை. துப்புரவு ஊழியர் ஒருவரை நியமித்து சுத்தம் செய்து பயணிகளை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source : Dinamalar