Nagaratharonline.com
 
குபேரர் கோவிலில் அட்சயதிருதி விழா  May 5, 11
 
சென்னை வண்டலூர் அருகே, ரத்னமங்கலத்தில் உள்ள ஸ்ரீலட் மி குபேரர் கோவிலில், அட்சய திருதியை முன்னிட்டு,6ம் தேதி, சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

அன்று சுக்ர ஓரை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன், கோ பூஜை செய்து சுக்ரனின் அதிதேவதையான குபேர லட் மியின், நடை திறக்கப்பட்டு மகாதீப ஆராதனையும், அதை தொடர்ந்து, மகாலட்சுமிக்கு உகந்த ஸ்லோகமும், ஸ்ரீசுத்தம் மற்றும் லட்சுமி அஷ்டகம் படித்து அன்று நாள் முழுவதும், ஆதிசங்கரர் அருளிய கனகதாராஸ்லோகம் படித்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு, தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன நாணயங்களும், பச்சை நிற குங்குமத்துடன் கூடிய அட்சயதிருதியை சிறப்பு பிரசாதமான, ஹரி பலம் என்றழைக்கப்படும் நெல்லிக்கனி அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.

பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை குபேர லட் மியிடம் வைத்தும், அட்சய திருதியை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ஆசி பெறலாம்.

source : Dinamalar