Nagaratharonline.com
 
கல்லல் ரோடு சந்திப்பில் "மெகா சைஸ்' பள்ளம்  May 2, 11
 
மதுரை - தொண்டி நெடுஞ்சாலை ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, இரண்டு ஆண்டுகளாகியும், இந்நிலை நீடிக்கிறது.
கல்லல் ரோடு சந்திப்பில் "மெகா சைஸ்' பள்ளம், பத்திரபதிவு அலுவலகம் முன் மழைநீர் வெளியேற தோண்டிய பள்ளங்களை மூடவில்லை. டீக்கடை, ஓட்டல் கழிவு நீரை ரோட்டில் ஊற்றுவதால், ரோடு எளிதில் பள்ளமாகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலக ஸ்டாப்பில் இருந்து சூசையப்பர்பட்டிணம் விலக்கு வரை ரோடுகள் ஆக்கிரமிப்பால், விபத்து அதிகரிக்கின்றன. ரோடுகளை செப்பனிட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

source : Dinamalar