Nagaratharonline.com
 
பாகனேரி : குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி  May 2, 11
 
பாகனேரி ஊராட்சியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இங்கு இரண்டு மேல்நிலை தொட்டிகள் மூலம் நூறு இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்திரா நகர், காளைலிங்கம் நகர், பழையவளவு பகுதிகளில், கடந்த 15 நாட்களாக சப்ளை இல்லாததால், குடிநீருக்காக அலையும் அவலம் நீடிக்கிறது

தெரு குழாய்களிலும் தண்ணீர் வரவில்லை. சுகாதாரமற்ற நீர் நிலைகளில் தண்ணீர் எடுப்பதால், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடங்களுடன் தெரு தெருவாக மக்கள் தண்ணீருக்காக அலைவது பரிதாப காட்சியாக அரங்கேறி வருகிறது. மெத்தனம்: கடந்த 15 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை. ஆனால் மாற்று வழி செய்யாமல், ஊராட்சியினர் மெத்தனமாக இருக்கின்றனர்.

source : Dinamalar