Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் கிடந்த அரிசி மூட்டைகள் பறிமுதல்  Apr 29, 11
 
பொன்னமராவதி பேருந்து நிறுத்தத்தில் கேட்பாரின்றிக் கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகள் வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டன.

பொன்னமராவதி நாட்டுக்கல் முக்கிய சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் கேட்பாரின்றி கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், வட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகர், தனி வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், அலுவலக உதவியாளர் செல்வம் உள்ளிட்டோர் பேருந்து நிறுத்தத்துக்குச் சென்று, அங்கு கேட்பாரின்றி கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளைக் கைப்பற்றி,திருமயம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தனர்.

கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி சுமார் 300 கிலோ இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடத்தும் நோக்கில் எடுத்து வந்து, அச்சம் காரணமாக பேருந்து நிறுத்தத்திலேயே அரிசி மூட்டைகளை விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

source : dinamani