Nagaratharonline.com
 
கண்டரமாணிக்கம் மஞ்சு விரட்டில் 56 பேர் காயம்: ஒருவர் பலி  Apr 29, 11
 
கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரை விழா, கடந்த 19 ம் தேதி துவங்கியது. தினமும் அம்மன் வீதி வலம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 26 ம் தேதி, அம்மன் சப்பரத்தில் தெற்குப்பட்டு மூலஸ்தானம் எழுந்தருளினார்.
மறுநாள் பால்குடம் எடுத்து சென்றனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அம்மன் கண்டரமாணிக்கம் கோயிலில் எழுந்தருளினார்.

நேற்று முன்தினம் மாலை ஆதீனமிளகி அய்யனார், முத்துமுனியைய்யா கோயில் மஞ்சுவிரட்டு நடந்தது.
அனுமதி பெற்ற 17 காளைகள் விடப்பட்டன. பதிவு செய்யப்படாத 100 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. இதில் 56 பேர் காயமடைந்தனர்; 10 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தென்மாபட்டை சேர்ந்த பன்னீர் (52), நேற்று அதிகாலை 12.20 மணிக்கு இறந்தார்.

source : Dinamalar