Nagaratharonline.com
 
சென்னை ரயில்களில் ஜூன் 10 வரை இடமில்லை  Apr 28, 11
 
வைகை, குருவாயூர், பாண்டியன், நெல்லை, முத்துநகர், அனந்தபுரி, பொதிகை என அனைத்து தினசரி ரயில்கள் தவிர, அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் ஜூன் 10 வரை இருக்கை, படுக்கை மற்றும் "ஏசி' வசதிகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இதனால் இந்த ரயிலுக்கு முன்பதிவு செய்ய வரும் பயணிகள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஜூன் 9 க்கு பிறகு தான் பாண்டியன், முத்துநகர், நெல்லை, பொதிகை ரயில்களில் வாய்ப்புகள் உள்ளன. பாண்டியனில் முதல் வகுப்பு "ஏசி' மே 17, இரண்டாம் வகுப்பு "ஏசி' ஜூன் 14, மூன்றாம் வகுப்பு "ஏசி' ஜூன் 10 வரை முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இதே நிலை மற்ற ரயில்களிலும் தொடருகிறது. கோடைக்காக விடப்பட்டுள்ள சென்னை, பெங்களூரு சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. தற்போது குருவாயூர் ரயில் காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.

அதை விட்டால், இரவு பாண்டியனில் தான் பயணிகள் செல்ல வேண்டும். அந்த ரயில் புறப்பட்ட சில மணி நேரங்களில் கூடுதலாக ஒரு ரயிலை இயக்க வேண்டும். இரவு
பாண்டியனுக்கு பின், முழுவதும் முன்பதிவு இல்லாத விரைவு ரயிலை சென்னைக்கு இயக்கினால், வசதியாக இருக்கும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

source : Dinamalar